Sunday, October 27, 2013

பழவினை பற்று

பாரமாய பழவினை  பற்று அறுத்து என்னைத்தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான்
கோரமாதவம் செய்தனன் கொல்? அறியேன் அரங்கத்து அம்மான் திரு
ஆரமார்பு அது அன்றோ அடியேனை ஆட்கொண்டதே!




பழவினை அறுத்து என்று  சொல்லவில்லை  ஏனென்றால் பழவினையானாலும் அதன்மீது நமக்கு  பற்று ஒன்று பற்றிக்கொண்டேதான் இருக்கும் அற்றது பற்றெனில் உற்றது வீடு என்கிறார் நம்மாழ்வாரும்
ஆகவே  அந்தப்பற்றினை  அறுக்கிறாராம் களைந்து என்றால் கூட மறுபடி துளிர்க்க  வாய்ப்பு உண்டு  ஆகவே அதனை அறுத்து  ஆழ்வாரைத்தன் அன்புக்கு   அபிமானத்திற்கு  உரியவராக   ஆக்கிவைத்து அதுமட்டுமின்றி அவரிடத்தில் புகுந்துவிட்டானாம்!  இதற்கெல்லாம் நான்  கடுமையா  தவம் ஏதும் செயலையே  அப்படி  செய்ததாக அறியேனே   இப்படி ஒருகருணை அவனுக்கு என்மேல் வர என்னகாரணம் அந்த  திருமார்பு தானோ(அதில் அன்னை இருப்பதன் கருணையோ என்பது மறைமுகப்பொருள்)  அந்த  திரு ஆர மார்பு  சிறந்த மாலை தரித்த மார்பு அல்லது திரு எனும்  லஷ்மியை நெஞ்சில் மாலையாய் எனும் கொண்ட மார்பு அது அல்லவா  என்னை  ஆட்க்கொண்டுவிட்டது!
வந்தாய்  என் மனத்தே  வந்து நீ புகுந்த பின்னை எந்தாய்  போய் அறியாய்  இதுவே அமையாதோ
என்று கண்ணபுரப்பெருமானை  இன்னொரு ஆழ்வார்  பாடியதை இங்கே  நினைப்போம்
பெருமான்  அருள் பெறுவோம் பாணரை  நம் நெஞ்சில் நிறுத்தி.

2 comments:

  1. அருள் பெறுவோம்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அரங்கத்து அம்மான் திரு
    ஆரமார்பு அது அன்றோ அடியேனை ஆட்கொண்டதே!... உண்மை கிளிக்குங்க சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    ReplyDelete