Monday, November 11, 2013

எண் திசையும் அறிய இயம்புகேன்!


கண்டுகொண்டு என்னைகாரிமாறப்பிரான்
பண்டை வல்வினை பாற்றி அருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ்ச்சடகோபன் அருளையே!


எம்பெருமான் ஆழ்வாரைக் கண்டு கொண்டமைப் போல, ஆழ்வார் தம்மைக் கண்டுகொண்டு தம்மிடம் இருந்த வினைகள் தம்மைத் தொடராமலும், பிறரை அடையச் செய்யாமலும் உருத்தெரியாமல் அழித்தொழிந்தார். அப்படிப்பட்ட சுவாமியின் புகழை எட்டு திக்குகளிலும் பரப்புவேன் என்கிறார் இந்தப்பாசுரத்திலே! குருமீதான அதீத ஈடுபாடு இப்பாசுரத்தில்  விளங்குகிறது

1 comment:

  1. மதுரகவி ஆழ்வாரின் குரு பக்திக்கு மற்றும் ஒரு எடுத்துகாட்டு .
    தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete