Saturday, November 16, 2013

பராங்குசனே பரனென்று பற்றினான் வாழியே!

மதுரகவி ஆழ்வார்   வாழித்திருநாமம்!

எம்பெருமான் கருணையால்  மதுரகவி ஆழ்வார் அருளிய பாசுரங்களை   முடித்தோம்.
ஆழ்வாரின் வாழித்திருநாமம்  இன்று.

சித்திரையிற்  சித்திரைநாள் சிறக்க வந்தோன் வாழியே
திருக்கோளூர் அவதரித்த  செல்வனார் வாழியே
உத்தர கங்கா தீரத் துயர் தவத்தோன் வாழியே
ஒளிக்கதிரோன்  தெற்குதிக்க உகந்து வந்தோன் வாழியே
பத்தியோடு பதினொன்றும்பாடினான்  வாழியே
பராங்குசனே பரனென்று பற்றினான் வாழியே
மத்திமாம் பதப்போருளை வாழ்வித்தான் வாழியே
மதுரகவி திருவடிகள் வாழி வாழியே!




மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம்!

(அடுத்து  திவ்யபிரபந்தத்தில்  முதலாழ்வார் பெருமான்களை  தரிசித்து அவர்தம் இயற்றிய பாசுரங்களை ஆராதிக்க  அரங்கன் அருளவேண்டும்.
 

1 comment:

  1. மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம்! சாமியே சரணம்... கிளிக்குங்க சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    ReplyDelete