Monday, November 4, 2013

என்னைப்பேதைமை செய்தனவே!

பரியன் ஆகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய ஆதிபிரான் அரங்கத்து அமலன்  முகத்துக்
கரியவாகி புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி ஓடி நீண்ட அப்
பெரியவாய கண்கள் என்னைப்பேதைமை செய்தனவே!


இப்பாடலில் நரசிம்ம அவதாரம் முதல் வரியில் வருகிறது.  ஆண்டாளும்  மாரி மலைமுழஞ்சில் என்ரபாசுரத்தில் நரசிம்மனை  நினைத்துக்கொள்வாள்.
அவன் எங்கும் இருப்பவன் அல்லவா? அவனைத்தவிர்ந்து எதனைக்கூறல் இயலும்?

பிரஹலாதனின் தந்தையின்   உடலைக்கீறியவன்  அமரர்க்கு  மிகவும்  அரியவனான  ஆதிமூர்த்தி. அவன் தான் அரங்கத்து அமலன் அவன் முகத்தில்  கரிய நிறத்தில்  புடைத்துப்பரந்து  ஒளிவீசி  சிவந்த வரிகள்  ஓடும் அந்தப்பெரியத்திருவிழிகளைக்காணும்போதே எனக்குபேதைமையாக  இருக்கிறது. ஆம்  நேத்ர தரிசனம் அல்லவோ கண்டுவிட்டார் பாணர் பெருமான்! அந்தப்பெரியவிழிகளில் இவர் புகுந்துவிட்டாராம்  பின்னர் பேசவும் வருமோ மனமே பேதைமை பிடித்தார்போலாகாதோ!

1 comment: