Saturday, November 16, 2013

உந்தன் மொய்கழற்கு அன்பையே!

பயன் அன்றாகிலும்* பாங்கல்லர் ஆகிலும்*
செயல் நன்றாகத்* திருத்திப் பணி கொள்வான்*
குயில் நின்றார் பொழில் சூழ்* குருகூர் நம்பி*
முயல்கின்றேன்* உந்தன் மொய்கழற்க்கு அன்பையே*




 எனது  தாழ்மையான விளக்கம்:

பயனில்லாமல்   இருப்பவரையும்  பாங்காய் நடக்கத்தெரியாதவராயினும்  அவர்களின்  காரியங்களைத்திருத்தி  தனக்கு  உகந்த  பணி செய்ய நியமித்துக்கொள்வான்  குயில்  வாழும்  சோலை சூழ்ந்த  குருகூரின் நம்பியே  அன்போடு நான்  உந்தன்   திருவடிதொழுகின்றேன்

இது  இன்னொரு ஆழ்வார் அன்பரின் விளக்கம்.

பிறர் திருந்துவதால் தமக்கு ஒரு பிரயோஜனம் இல்லாமல் இருந்தாலும், அதே போன்று கேட்பவர்களிடத்தில் திருந்தும் மனப்பான்மை இல்லாமல் போனாலும், அவருடைய குணப்பூர்த்தியால் தம்மை அண்டினவர்கள், அண்டாதவர்கள், நாட்டில் உள்ள எல்லோரும் உய்யும் படி எல்லோரையும் திருத்திப் பணிகொள்பவர் சுவாமி நம்மாழ்வார். மேலும் சுவாமி நம்மாழ்வாரைப் பற்றினால் இங்கேயே ஆனந்தம் பெறலாம் என்றும், எம்பெருமானை அடைவதற்கோ தெளிவிசும்பு திருநாட்டுக்கு எழுந்தருள வேண்டும் என்றும், அதுவும் நித்யர்கள் மற்றும் முக்தர்களே அங்கு அனுபவிக்கமுடியும் என்றும், ஆனால் தமக்கோ சுவாமி நம்மாழ்வாரின் திருவடிகளைப் பற்றினவாரே ஆனந்தம் கிடைத்ததையும், அதற்க்கு பிரதி உபகாரம் ஒன்றும் செய்ய முடியாமல் தடுமாறி அன்பு செய்ய முயலுகிறார்

^^^^^  நாம்  அறியாமல் தவறு செய்துவிட்டால் இந்தப்பாசுரத்தை  இறைவனுக்கு சமர்ப்பணம் செய்து பாடினால்  நம் தவறுகள்  மன்னிக்கப்படும் என்று சிலர் சொல்கிறார்கள்

1 comment:

  1. அறியாமல் செய்யும் தவறுகள் இறை அடி பணிந்தால் அன்றே மன்னிக்கப்படுகின்றன. கிளிக்குங்க சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    ReplyDelete